தமிழகத்தின் பருவ நிலை மாறி வரும் நிலையில் தற்போது வெயில் மக்களை வாட்டி வதைத்து வருகிறது. இந்நிலையில் அடுத்த 7 நாட்கள் வானிலை முன்னறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி இன்று மற்றும் நாளை தமிழகம், புதுவை, காரைக்கால் உள்ளிட்டவற்றில் வறண்ட வானிலை நிலவ கூடுமாம்.
மேலும் 24.2.2024 மற்றும் 25.2.2024 தமிழகத்தின் ஓரிரு இடங்களில் மற்றும் புதுவை காரைக்கால் உள்ளிட்ட பகுதியில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. அதோடு சென்னையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானிலை மேகமூட்டத்துடன் காணப்படுமாம். மேலும் கடலில் சூறாவளி காற்றுக்கு வாய்ப்பில்லாததால், மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை எதுவும் இல்லை.