இந்தியாவில் உள்ள பல்வேறு மைதானங்களை மையமாக கொண்டு, புரோ கபடி லீக் தொடர் 12 அணிகளுக்கு இடையே விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இறுதிக் கட்ட லீக் சுற்றுகள் தற்போது நடைபெற்று வரும் நிலையில், புள்ளிப் பட்டியலில் அதிக புள்ளிகளுடன் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் நேரடியாக அரையிறுதிப் போட்டிக்கு முன்னேறும். புள்ளிப் பட்டியலில் அடுத்துள்ள 4 அணிகள் பிளே ஆப் சுற்றில் வரும் பிப்ரவரி 26 ஆம் தேதி போட்டியிடும்.
இன்றைய (பிப். 19) புள்ளி பட்டியல் அடிப்படையில், ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் மற்றும் புனேரி பல்டன் முதல் இரண்டு இடத்தை பிடித்து அரையிறுதிக்கு நேரடியாக முன்னேற தயாராக உள்ளது. இதனை தொடர்ந்து, தபாங் டெல்லி, குஜராத் ஜெயண்ட்ஸ், ஹரியானா ஸ்டீலர்ஸ் மற்றும் பாட்னா பைரேட்ஸ் அடுத்த 4 இடங்களை பிடித்து பிளே ஆப் சுற்றுக்கு முன்னேற முன்னிலையில் உள்ளது. இதில், தமிழ் தலைவாஸ் அணியானது 8 வது இடத்தை பிடித்துள்ளதால், அடுத்த சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பு என்பது குறைவாகவே உள்ளது.
Enewz Tamil WhatsApp Channel