தமிழக மக்களே உஷார்.., இந்த மாவட்டங்களில் உறைபனிக்கு வாய்ப்பு.., வானிலை மையம் தகவல்!!!

0
தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழகம், புதுவை, காரைக்கால் ஆகிய இடங்களில் ஒரு சில பகுதிகளில் அதிகாலை வேளையில் லேசான பனி மூட்டத்திற்கு வாய்ப்புள்ளது. மேலும் தென் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும்.
அது மட்டுமல்லாமல் தமிழகத்தின் நீலகிரி மாவட்டத்தில் இன்றும், நாளையும் ஓரிரு இடங்களில் உறை பனிக்கு வாய்ப்பு உள்ளதால் பொதுமக்கள் உஷாராக இருக்க வானிலை மையம் அறிவுறுத்தியுள்ளது. மேலும் சென்னையில் பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில இடங்களில் லேசான பனி மூட்டத்திற்கு வாய்ப்பு உள்ளது என தெரிவித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here