தமிழகத்தில் பெய்த வடகிழக்கு பருவமழையால் தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்கள் வெள்ளத்தில் மூழ்கியது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.இப்படி இருக்கையில் வானிலை மையம் ஒரு முக்கிய அறிவிப்பு போன்ற வெளியிட்டுள்ளது. அதாவது அடுத்த 7 நாட்களுக்கு புதுவை, காரைக்கால், தமிழகம் உள்ளிட்ட பகுதிகளில் லேசான முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாம்.
அதிலும் குறிப்பாக நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதோடு இன்று முதல் 6ஆம் தேதி வரை குமரி, மன்னார் வளைகுடா மற்றும் அரபிக்கடல் பகுதியில் சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோமீட்டர் வேகத்தில் வீசும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் மேற்கூறிய தினங்களில் மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
Enewz Tamil WhatsApp Channel
தமிழக மக்களே…, அரசு வேலை.., உங்களுக்கான அரிய வாய்ப்பு…, இதுக்கு மட்டும் APPLY பண்ணுங்க போதும்!!