தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழ் அடுக்கு சுழற்சி காரணமாக தமிழகம், புதுவை, காரைக்கால் ஆகிய பகுதிகளில் அடுத்த மூன்று நாட்களுக்கு லேசானது முதல் மிக கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக தெரிவித்துள்ளனர். மேலும் தமிழகத்தின் தென் மாவட்டங்களில் பலத்த மழைக்கு வாய்ப்பு உள்ளது.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
சென்னையில் பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யலாம் என தெரிவித்துள்ளனர். குறிப்பாக ராமநாதபுரம், கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக குறிப்பிட்டுள்ளனர்.