தமிழகத்தில் போக்குவரத்து ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு உள்ளிட்ட 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று (ஜன. 9) முதல் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் பொது மக்கள் பாதிக்கப்படக் கூடாது என்பதற்காக தற்காலிக பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துனர்களுக்கு தமிழக அரசு வரவேற்பு விடுத்து, அவர்கள் மூலம் இயக்கி வருகிறது. இந்நிலையில் விழுப்புரத்தில் ஆய்வு செய்த போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் செய்தியாளர்களிடம் முக்கிய தகவலை தெரிவித்துள்ளார்.
Enewz Tamil WhatsApp Channel
அதாவது “போராட்ட ஊழியர்களின் 2 கோரிக்கைகள் நடைமுறையில் உள்ளது. 2 கோரிக்கைகளை நிறைவேற்றி கொடுப்பதாக உறுதியளித்துள்ளோம். மற்ற 2 கோரிக்கைகள் நிதி பிரச்சனை காரணமாக நிறைவேற்ற கால அவகாசம் வேண்டும். அதை புரியாமல் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்த நாங்கள் தயாராக உள்ளோம்.” என கூறியுள்ளார்.
தமிழக இல்லத்தரசிகளே…, அதிரடியாக குறைந்த காய்கறிகளின் விலை…, ஒரு கிலோவின் முழு நிலவரம் உள்ளே!!