தமிழகம் புதுச்சேரி காரைக்கால் உள்ளிட்ட மாவட்டங்களில் மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக அடுத்த ஏழு நாட்களுக்கு இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக தெரிவித்துள்ளனர். மேலும் தமிழகத்தில் கோயம்புத்தூர், நீலகிரி, தேனி, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
சென்னையை பொருத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் முக்கிய இடங்களில் இடியுடன் கூடிய கனமழை வெளுத்து வாங்க கூடும். மேலும் தென் தமிழக மற்றும் மன்னார் வளைகுடா கடலோர பகுதிகளில் மணிக்கு 45 முதல் 55 கிலோமீட்டர் வரை சூறாவளி காற்று வீச வாய்ப்புள்ளதால் மீனவர்கள் கடலுக்குச் செல்ல எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
எதிர்நீச்சல் குணசேகரன் கடந்து வந்த பாதை.., இவ்வளவு கொடுமை அனுபவிச்சுருக்காரா?? வெளியான தகவல்!!!