தமிழகத்தில் தற்போது தான் மிக்ஜம் புயல் கரையை கடந்துள்ள நிலையில் சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் மக்கள் இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளனர். இந்நிலையில் தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் அடுத்த 6 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக தெரிவித்துள்ளனர்.
Enewz Tamil WhatsApp Channel
மேலும் டிசம்பர் 9 ஆம் தேதி அன்று தென்காசி, விருதுநகர், மதுரை, தேனி, திண்டுக்கல், கோயம்புத்தூர் மற்றும் நீலகிரி மாவட்டங்களில் பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை மையம் எச்சரித்துள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என தெரிவித்துள்ளனர்.