சென்னையில் வந்த மிக் ஜாம் புயல் காரணமாக வரலாறு காணாத பாதிப்புகள் ஏற்பட்டு வருகிறது. இதில் இருந்தே மக்கள் மீள முடியாமல் அவதிப்பட்டு வரும் நிலையில், தற்போது அதிர்ச்சி தரும் விதமாக ஒரு செய்தி வெளியாகியுள்ளது. அதாவது சென்னை பிரபல சாலையான ஓஎம்ஆர் கந்தன்சாவடி அருகில் தனியார் பெட்ரோல் பங்க் ஒன்று இயங்கி வருகிறது. இந்த பெட்ரோல் பங்க்கிற்கு கிட்டத்தட்ட ஏகப்பட்ட பொது மக்கள் வந்து செல்கின்றனர்.
இந்நிலையில் இன்று எதிர்பாராத விதமாக திடீரென பெட்ரோல் பங்க்கில் தீ விபத்து ஏற்பட்டு வேகமாக பரவ ஆரம்பித்து. அச்சமயம் அங்கிருந்த பொதுமக்கள் தீயை அணைக்க போராடிய நிலையில் தீயணைப்பு வீரர்களுக்கு தகவல் கொடுத்தனர். இதனை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள் சிறிது நேரம் போராட்டத்திற்கு பிறகு தீயை அணைத்தனர். இதுகுறித்து விசாரித்த போது, மின்கசிவால் இந்த தீ விபத்து ஏற்பட்டது என்று தெரியவந்துள்ளது.