கடந்த சில தினங்களுக்கு முன் வங்கக்கடலில் ஏற்பட்ட மிக்ஜாம் புயல் காரணமாக சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் தொடர் கனமழை பெய்து இருந்தது. புயல் ஓய்ந்து இரு தினங்கள் ஆகியும் இன்றளவும் சென்னை மற்றும் புறநகர் பகுதி குடியிருப்புகளில் மழைநீர் தேக்கம் முழுவதுமாக சரிசெய்யப்படவில்லை. இதன் காரணமாக சென்னை மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் இன்று (டிச. 7) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.
Enewz Tamil WhatsApp Channel
அதேபோல் செங்கல்பட்டு மாவட்டத்தில் திருக்கழுக்குன்றம், செங்கல்பட்டு, திருப்போரூர், வண்டலூர் மற்றும் தாம்பரம் ஆகிய தாலுகாக்களிலும், காஞ்சிபுரத்தில் குன்றத்தூர் மற்றும் ஸ்ரீபெரும்புதூர் ஆகிய தாலுகாக்களிலும் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக மக்களே., அடுத்த 6 நாட்களுக்கு இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு., வானிலை மையம் அறிவிப்பு!!!