தமிழகத்தின் கடந்த சில நாட்களாக மேற்கு திசை காற்றின் வேகம் மாறுபாடு காரணமாக பல்வேறு மாவட்டங்களில் லேசானது முதல் இடியுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது. மேலும் இன்று முதல் அடுத்த ஆறு நாட்களுக்கு தமிழகம், புதுவை, காரைக்கால், உள்ளிட்ட இடங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு இருப்பதால் பொதுமக்களும், மீனவர்களும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என வானிலை மையம் அறிவுறுத்தி இருந்தது குறிப்பிடத்தக்கது.
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
இந்நிலையில் இன்று சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, விழுப்புரம், கன்னியாகுமரி, நெல்லை, தென்காசி ஆகிய 9 மாவட்டங்களில் அடுத்த மூன்று மணி நேரத்திற்குள் லேசானது முதல் இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என வானிலை மையம் எச்சரித்துள்ளது. இது தவிர மதுரை, திண்டுக்கல், தேனி ஆகிய மாவட்டங்களில் பரவலாக மழை பெய்ய வாய்ப்புள்ளது எனவும் தெரிவித்துள்ளனர்.