தொடர்ந்து குறையும் தங்கத்தின் விலை – நகை வாங்க இதுதான் சரியான நேரம்!!

0

தமிழகத்தில் கடந்த ஆகஸ்ட் மாதம் முதல் வாரத்தில் சவரன் 43 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட ஆபரணத் தங்கம், தற்போது படிப்படியாக குறைந்து வருவது பொது மக்களை சற்று நிம்மதி அடைய வைத்துள்ளது. இதனால் நகை வியாபாரம் அதிகரித்து உள்ளதாக கடை உரிமையாளர்கள் தெரிவித்து உள்ளனர்.

இன்றைய விலை:

கொரோனா வைரஸ் தொற்று உயிரிழப்புகள் மட்டுமின்றி ஈடு செய்ய முடியாத பொருளாதார இழப்புகளையும் ஏற்படுத்தி உள்ளது. இதனால் ஏற்பட்ட பாதிப்புகளை சரி செய்ய இன்னும் 10 ஆண்டுகளுக்கு மேல் தேவைப்படும் என உலக சுகாதார அமைப்பு கூறியுள்ளது. கொரோனா பரவலால் ஏற்பட்ட பாதிப்பால் ரியல் எஸ்டேட், பங்குச்சந்தைகள் போன்ற துறைகள் பெரும் சரிவை சந்தித்தன. இதனால் அதில் இருந்த முதலீடுகள் அனைத்தும் தங்கம் போன்ற ஆபரணங்கள் மீது திரும்பியது.

ENEWZ – சமூக வலைதள பக்கங்களில் சேர கிளிக் பண்ணுங்க!!

இந்த காரணங்களால் அதன் தேவை அதிகரித்து விலையும் உயர்ந்தது. ஊரடங்கு காலத்தில் மட்டும் 3 ஆயிரம் ரூபாய்க்கு மேல் தங்கத்தின் விலை அதிகரித்துள்ளது. கடந்த ஆகஸ்ட் மாதம் 6ம் தேதி சவரன் 43 ஆயிரத்திற்கு விற்பனை ஆன ஆபரணத் தங்கத்தின் விலை, இந்த மாத தொடக்கத்தில் இருந்தே சரிந்து வருகிறது.

அதிரடியாக குறைந்த பெட்ரோல், டீசல் விலை – உடனே வண்டிய கிளப்புங்க!!

சென்னையில் இன்று ஒரு கிராம் ஆபரணத் தங்கம் (22 காரட்) ரூ. 15 குறைந்து ரூ.4,890-க்கும், ஒரு சவரன் 120 ரூபாய் குறைந்து ரூ.39,120-க்கும் விற்பனை ஆகிறது. வெள்ளியின் விலை ஒரு கிராம் ரூ.69.80 ஆக உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here