கொரோனாவின் தாக்கம் எப்போதுதான் குறையும்? இன்னும் எத்தனை பேரை பலி வாங்கும்? கொரோனா வைரசால் ஊரடங்கு உத்தரவு போடப்பட்டுள்ளது,பொருளாதாரம் என்னவாகும்? என்ற பல கேள்விகள் நம் மனதில் எழுந்து வருகின்றன. இந்நிலையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை உயர்ந்து உள்ளது.
தங்கம் மீது முதலீடு
ஊரடங்கு உத்தரவு உள்ள நிலையில் மக்களின் சராசரி வாழ்கை திரும்பத் தொடங்கியுள்ளது. இந்நேரத்தில் தங்கம் விலை சிறிதளவில் உயர்ந்துள்ளது. நாட்டின் பணவீக்க உயர்விற்கு முக்கிய ஆதாரமாக கருதப்படும் தங்கத்தில் இந்திய மக்கள் அதிகளவில் முதலீடு செய்தும் பயன்படுத்தியும் வருகின்றனர்.
தங்கத்தை பாதுகாப்பான மற்றும் லாபகரமான முதலீடாகவும் சமானியர்கள் மட்டும் அல்லாமல் பங்குச்சந்தை முதலீட்டாளர்களும் இது முக்கிய முதலீடாக திகழ்கிறது.பாதுகாப்புக்காக்க தங்கத்தில் முதலீடு செய்து தங்கத்தின் தேவை அதிகரித்து தங்க விலை உயர்ந்து வருகிறது. கொரோனா பரவல் பாதிப்பால் தொழில்துறை தேக்கம் குறித்த பயம் நிலவி வரும் இந்த நேரத்தில் தங்கம் விலையில் தற்போது ஏற்ற இறக்கங்கள் நிலவி வருகிறன. இந்தநிலையில் இன்று தங்கம் விலை எறியுள்ளது.
இன்றைய தங்கத்தின் விலை
இன்று ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.50 உயர்ந்து ரூ.4469-க்கு விற்பனையாகிறது. பவுனுக்கு ரூ.400 அதிகரித்து ரூ. 35752க்கு விற்பனையாகிறது.இதேபோல் 24 காரட் சுத்தத் தங்கத்தின் விலை 8 கிராம் 37416 ரூபாய்க்கு விற்பனையாகிறது. அதேசமயம் வெள்ளியின் விலை மாற்றமின்றி 41.70 ரூபாய்க்கு விற்பனையாகிவிலைக் குறைப்பு தொடரும் பட்சத்தில் மே 3ஆம் தேதிக்குப் பிறகு தங்கம் வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு சிறந்த வாய்ப்பாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
To Subscribe Youtube Channel | Click Here |
To Join WhatsApp Group | Click Here |
To Join Telegram Channel | Click Here |