தமிழகத்தில் காலியாக உள்ள போலீஸ் கான்ஸ்டபிள், சிறைக்காவலர், தீயணைப்பு பணியாளர் உள்ளிட்ட 11,741 பணியிடங்களுக்கு கடந்த டிசம்பர் 13ம் தேதி தேர்வு நடைபெற்றது. மாநிலம் முழுவதும் லட்சக்கணக்கான தேர்வர்கள் இதில் கலந்து கொண்டனர். கொரோனா பரவல் அச்சம் காரணமாக பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன் தேர்வு நடைபெற்றது.
ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!
முதற்கட்டமாக எழுத்து தேர்வு முடிவடைந்து உள்ள நிலையில் அதற்கான அதிகாரப்பூர்வ விடைகுறிப்பினை தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையம் (TNUSRB) தற்போது வெளியிட்டு உள்ளது. இதில் ஏதேனும் தவறுகள் அல்லது சந்தேகங்கள் இருந்தால் தேர்வர்கள் வருகின்ற 23ம் தேதிக்குள் சென்னை TNUSRB அலுவலகத்தில் தெரிவிக்குமாறு அறிவுறுத்தப்பட்டு உள்ளது. கீழே கொடுக்கப்பட்ட லிங்கில் விடைக்குறிப்பை டவுன்லோட் செய்து சரிபார்த்து கொள்ளலாம்.
TNUSRB போலீஸ் கான்ஸ்டபிள் 2020 விடைக்குறிப்பு