தமிழக டெட் தேர்வர்களுக்கு, இதுவரை இல்லாத வகையில் புதிய விளக்கத்துடன் கூடிய அறிவிப்பு ஒன்றை , மாநில கல்வித்துறை அதிரடியாக வெளியிட்டுள்ளது.
கல்வித்துறை விளக்கம் :
தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில், காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப ஆசிரியர் தகுதி வாரியம் மூலம் டெட் தேர்வு நடத்தப்படுகிறது. இந்தத் தேர்வில் வெற்றி பெறும் தேர்வர்களுக்கு, கலந்தாய்வின் அடிப்படையில் அரசு பள்ளிகளில் ஆசிரியர் பணி வழங்கப்படுகிறது.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
அந்த வகையில் இந்த ஆண்டிற்கான டெட் தேர்வுகள் சமீபத்தில், முதல் முறையாக ஆன்லைன் வாயிலாக நடத்தப்பட்டது. இதற்கான முடிவுகள் விரைவில் வெளியிடப்பட உள்ளது. இந்த நிலையில், டெட் தேர்வு குறித்த புதிய விளக்கம் ஒன்றை கல்வித்துறை அதிரடியாக வெளியிட்டுள்ளது.
அதாவது, கடந்த 2010 ஆகஸ்ட் 23ஆம் தேதிக்கு முன், வெளியிடப்பட்ட வாரிய விளம்பரங்கள் அடிப்படையில் பட்டதாரி ஆசிரியர்களாக பணியில் சேர்ந்தவர்கள், இந்த டெட் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டிய அவசியம் இல்லை என்றும், அவர்கள் பணியை தொடரலாம் என்றும் கல்வித்துறை விளக்கம் அளித்துள்ளது. இதனால், அந்த குறிப்பிட்ட காலத்திற்குள் பணியில் சேர்ந்த பட்டதாரி ஆசிரியர்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.