இந்தியா அனைத்து செயல்களிலும் டிஜிட்டல் மையத்தை நோக்கி நகர்ந்து வரும் நிலையில், டிஜிட்டல் கரன்சியை இன்று முதல் 9 பொதுத்துறை வங்கிகளில் அறிமுகப்படுத்துவதாக ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.
ரிசர்வ் வங்கி அறிவிப்பு:
மத்திய அரசு, கடந்த சில ஆண்டுகளுக்கு முன் டிஜிட்டல் இந்தியா என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தியது. இதன் வாயிலாக, பொதுமக்கள் அனைவரும் டிஜிட்டல் யுகத்திற்கு மாற வேண்டும் என வேண்டுகோள் விடுத்தது. அந்த வகையில் தற்போது, பொருளாதாரத்தின் அடுத்த நிலையை எட்டும் டிஜிட்டல் கரன்சி விரைவில் அறிமுகப்படுத்தப்படும் என மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அண்மையில் அறிவித்திருந்தார்.
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
அதன் அடிப்படையில், நாட்டின் பொதுத்துறை வங்கியான எஸ்பிஐ, எச்டிஎப்சி, கோடக் மகேந்திரா, ஐடிஎப்சி ஃபர்ஸ்ட், ஐசிஐசிஐ, எஸ் பேங்க் உள்ளிட்ட 9 வங்கிகளில் சோதனை அடிப்படையில், டிஜிட்டல் கரன்சி இன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. மெய்நிகர் நாணயம் என்று சொல்லப்படும், கிரிப்ட்டோ கரன்சிகளின் பயன்பாடு தற்போது வேகமாக வளர்ந்து வரும் நிலையில், இந்த டிஜிட்டல் கரன்சியின் அறிமுகம் பொருளாதாரத்தில் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.
இந்த கரன்சிகளைக் அரசின் பங்கு பத்திரங்களில் பரிமாற்றம் செய்ய பயன்படுத்தலாம் என்றும், இதனால் பணப்பரிமாற்றம் வேகமாகவும் எளிதாகவும் நடக்கும் என்றும் RBI நம்பிக்கை தெரிவித்துள்ளது. நிர்வாகத்தின் இந்த அதிரடி நடவடிக்கை, இந்திய பொருளாதாரத்தில் மிகப்பெரிய வளர்ச்சியை ஏற்படுத்தும் என்பதே, பொருளாதார வல்லுநர்களின் கணிப்பாக இருந்து வருகிறது