தமிழகத்தில் அரசு போக்குவரத்து கழக ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு அகவிலைப்படி, ஊதிய உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை சிஐடியு, ஏஐடியுசி போன்ற சங்கங்கள் நீண்ட காலமாக வலியுறுத்தி வருகின்றனர். இது தொடர்பாக நடைபெற்ற பேச்சுவார்த்தை தோல்வியில் முடிவடைந்ததால், கடந்த ஜன.9, 10 ஆகிய தேதிகளில் நடைபெற்ற வேலை நிறுத்த போராட்டம், உயர் நீதிமன்ற அறிவுறுத்தலின் படி கைவிடப்பட்டது.
இந்நிலையில் சென்னை தேனாம்பேட்டையில், 7-ம் கட்ட பேச்சுவார்த்தை நேற்று (மார்ச் 6) நடைபெற்றது. இதன் முடிவில், “பணியில் உள்ள ஊழியர்களுக்கு நிலுவையில் உள்ள அகவிலைப்படி, மேலும் ஒரு மாதத்திற்கு சேர்த்து வழங்கப்படும்.” என தெரிவித்துள்ளதாக சிஐடியு மாநில தலைவர் அ.சவுந்தரராஜன் கூறியுள்ளார். அந்த அகவிலைப்படி உயர்வை ஓய்வு பெற்றவர்களுக்கும் வழங்க வலியுறுத்தி இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
Enewz Tamil WhatsApp Channel
TNPSC “குரூப் 1” தேர்வர்களே., ஆன்லைன் மூலம் தயாராவது எப்படி? சூப்பர் வாய்ப்பை மிஸ் பண்ணிடாதீங்க!!!