நாடு முழுவதும் வாகன ஓட்டிகளுக்கு பல்வேறு அறிவிப்புகளையும், எச்சரிக்கைகளையும் போக்குவரத்து காவல்துறையினர் அறிவித்து வருகின்றனர். அந்த வகையில் இப்போது கர்நாடக மாநிலத்தில் உள்ள வாகன ஓட்டிகளுக்கு முக்கிய அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது அம்மாநிலத்தில் கடந்த 2019 ஆம் ஆண்டுக்கு முந்தைய வாகனங்களில் HSRP நம்பர் பிளேட் பொருத்துவது கட்டாயம் என போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது.
மேலும் இதற்கு இரண்டு முறை கால அவகாசம் கொடுத்துள்ள நிலையில் தற்போது அதை மேலும் மே மாதம் வரை நீட்டித்துள்ளதாக தெரிவித்துள்ளனர். இந்நிலையில் இந்த HSRP நம்பர் பிளேட்டுகளை பொருத்துவதற்கு பதிவு செய்வதில் பல்வேறு மோசடிகள் நடப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அதனால் வாகன ஓட்டிகள் நம்பர் பிளேட் பெற #HSRP அதிகாரப்பூர்வ இணையதளத்தில் மட்டும் பதிவு செய்ய வேண்டும் என போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.