டிஎன்பிஎஸ்சி குரூப் 4 சர்ச்சைக்குரிய 9 தேர்வு மையங்கள் ரத்து – டிஎன்பிஎஸ்சி அதிரடி உத்தரவு

0
TNPSC

தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) நடத்திய குரூப் 4 தேர்வில் முறைகேடு நடைபெற்றதாக எழுந்த புகார்களை தொடர்ந்து தற்போது விசாரணை நடைபெற்று வரும் நிலையில் தற்போது அந்த சர்ச்சைக்குரிய 9 தேர்வு மையங்களும் ரத்து செய்யப்பட்டுள்ளதாக டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.

Image result for whatsapp logo

வாட்ஸ்ஆப் குரூப்பில் சேர இங்கே கிளிக் செய்யவும்

முதல் 100 இடங்களில் சர்ச்சை

2019ம் ஆண்டு செப்டம்பர் 1ம் தேதி டிஎன்பிஎஸ்சி காலியாக உள்ள 9398 பணியிடங்களை நிரப்புவதற்காக குரூப் 4 தேர்வினை மாநிலம் முழுவதும் நடத்தியது. இத்தேர்வினை தமிழகம் முழுவதும் 16 லட்சத்து 29 ஆயிரத்து 865 பேர் எழுதினர். இதற்கான முடிவுகளும் நவம்பர் 12ம் தேதி வெளியிடப்பட்டது. இதற்கான தரவரிசை பட்டியலில் முதல் 40 இடத்தைப் பிடித்தவர்கள் ராமேஸ்வரத்தில் உள்ள கீழக்கரை தேர்வு மையத்தில் எழுதியவர்கள் என்பது தெரிய வந்தது. ஒரே இடத்தைச் சேர்ந்தவர்கள் முதல் 100 இடங்களுக்குள் வந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனால் சர்ச்சை கிளம்பிய நிலையில் முதல் 35 இடங்களை பிடித்தவர்களிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.

Image result for telegram logo

டெலிகிராம் சேனலில் சேர இங்கே கிளிக் செய்யவும்

தேர்வு மையங்கள் ரத்து

விசாரணையில் தேர்வர்கள் ஒரே மாதிரியான பதில்களை கூறியதால் சந்தேகம் மேலும் அதிகமானது. இதனால் சர்ச்சைக்குரிய அந்த 9 தேர்வு மையங்களும் ரத்து செய்யப்படுவதாக டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.

Image result for youtube logo

யூடூப் சேனலில் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ரத்து செய்யப்பட்டுள்ள மையங்கள்:

  1. ராமேஸ்வரம் பகுதியில் உள்ள ஐந்து தனியார் பள்ளிகள் மற்றும் ஒரு தனியார் பாலிடெக்னிக் கல்லூரி
  2. கீழக்கரையில் உள்ள இரண்டு தனியார் கல்லூரி, ஒரு தனியார் பள்ளி என மொத்தம் 9 தேர்வு மையங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது.

இதனால் அங்கு தேர்வு எழுதியவர்களுக்கு மறுதேர்வு நடத்தப்படுவது குறித்தும், புதிய தரவரிசைப் பட்டியல் வெளியிடுவது குறித்தும் சீக்கிரம் உத்தரவு வெளியாகவுள்ளது.

To Subscribe Youtube Channel Click Here
To Join WhatsApp Group Click Here
To Join Telegram ChannelClick Here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here