தமிழகம் முழுவதும் உள்ள மின் நுகர்வோர்களுக்கு, தடையில்லா மின்சாரம் வழங்க பல்வேறு முன்னேற்பாடுகளை மின்வாரியம் மேற்கொண்டு வருகிறது. அதன்படி வருகிற கோடை காலத்தில் மின் தட்டுப்பாடு களை சமாளிக்க நடவடிக்கை எடுத்து வரும் நிலையில், விரைவில் லோக்சபா தேர்தலும் நடைபெற இருப்பதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
இதன் காரணமாக மின் தேவை கூடுதலாக தேவைப்படும் என்பதால், மத்திய அரசு மின் நிலையங்கள் மற்றும் தனியார் நிறுவனங்களிடம் மின்சாரம் கொள்முதல் செய்ய முடிவு செய்துள்ளனர். அதன்படி 2024 ஏப்ரல் 1 முதல் மே 31 வரையிலும், அனு தினமும் மாலை 06:00 முதல் நள்ளிரவு 12:00 மணி வரை, 1,000 மெகாவாட் வீதம் மின் கொள்முதல் செய்ய TNEB திட்டமிட்டுள்ளது.