நாடு முழுவதும் அனைத்து மாநிலங்களிலும் கடுமையான குளிர் நிலவி வருகிறது. குறிப்பாக டெல்லி. ஹரியானா, பஞ்சாப் ஆகிய மாநிலங்களில் கடும் பனி நிலவுவதால் மக்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். மேலும் டெல்லியில் நிலவும் கடும் பனியினால் 50 மீட்டர் தொலைவில் எதிரே வருபவர்கள் கூட கண்ணுக்கு தெரியவில்லை.
இதனால் வாகன ஓட்டிகள் முகப்பு விளக்குகளை எரியவிட்ட படி செல்கின்றனர். இப்படி இருக்கையில் டெல்லிக்கு வரும் அனைத்து ரயில்களும் பனிமூட்டம் காரணமாக தாமதமாக வருகிறது. இதனால் பயணிகள் மிகவும் சிரமப்படுகின்றனர். மேலும் அடுத்த சில நாட்களுக்கு டெல்லியில் கடும் பனி நீடிக்கும் என தெரிவித்துள்ளனர்.