தமிழகத்தில் மின் இணைப்புடன் ஆதாரை இணைக்க, இன்னும் 5 நாட்கள் மட்டுமே கெடு உள்ளதாகவும், இதை இணைக்கவில்லை என்றால் அடுத்தது இதுதான் நடக்கும் என மின்வாரியம் எச்சரித்துள்ளது.
மின் வாரியம் கெடு :
தமிழகத்தில் கடந்த டிசம்பர் மாதம், மின் இணைப்புடன், ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என அரசின் சார்பாக அறிவிக்கப்பட்டது. மின் கட்டணத்தில் ஏற்படும் முறைகேடுகளை தடுக்கவும், இலவச மின் மானியம் பெறுவோர்களை கணக்கெடுக்கவும் இந்த இணைப்பை செய்ய வேண்டும் என அரசு வலியுறுத்தியது.
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
அந்த வகையில், இந்த மின் இணைப்புக்கான காலக்கெடு வருகிற ஜனவரி 31ம் தேதியுடன் நிறைவடைய உள்ளது. இதற்கு இன்னும் 5 நாட்களே இருக்கும் நிலையில், இதை முடிக்காதவர்கள் விரைந்து இந்த இணைப்பை செய்து முடிக்க வேண்டும் என மின்வாரியம் வலியுறுத்தியுள்ளது.
மத்திய பட்ஜெட் 2023.., முக்கிய கோரிக்கைகளை முன்வைக்கும் மாநில அரசு!!!
அப்படி இல்லை என்றால் வரும் பிப்ரவரி மாதத்தில் இருந்து மின் கட்டணத்தை செலுத்த முடியாது எனவும், இதற்கான அவகாசத்தை இனி நீட்டிக்க வாய்ப்பில்லை என்றும் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. இதனால் இதற்கான இறுதி கட்டப் பணிகள் தற்போது முடுக்கி விடப்பட்டுள்ளது