தமிழகத்தில் தகுதியான குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.1,000 உரிமை தொகை வழங்குவதற்கான விண்ணப்பங்கள், இரண்டு கட்டமாக நடைபெற்ற நிலையில் ஒரு கோடியே 15 லட்சம் பேர் தேர்வு செய்யப்பட்டனர். இதைத்தொடர்ந்து விண்ணப்பித்து நிராகரிக்கப்பட்டவர்கள் மற்றும் புதிய விண்ணப்பதாரர்களுக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்து வந்தனர்.
இந்த நிலையில் இது தொடர்பாக திருவண்ணாமலை தேர்தல் பரப்புரையில் பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், “மகளிர் உரிமை தொகை திட்டத்தில் சிறு சிறு குறைகள் உள்ளனர். இத்திட்டத்திற்கு விண்ணப்பித்த அனைத்து குடும்ப தலைவிகளுக்கும் ரூ.1,000 உரிமை தொகை கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும். இதுகுறித்த அறிவிப்பு, தேர்தலுக்கு பிறகு வெளியாகும்.” என மகிழ்ச்சியை தகவலை தெரிவித்துள்ளார்.