தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த பலரும் சென்னையில் வேலை மற்றும் கல்வி நிமித்தமாக தங்கி வருகின்றனர். இவர்கள் பண்டிகை உள்ளிட்ட தொடர் விடுமுறை தினங்களில் சொந்த ஊர்களுக்கு சென்று வருவது வழக்கமாக உள்ளது. இதனை கருத்தில் கொண்டு அன்றைய தினம் மட்டும் கூடுதலாக சிறப்பு பேருந்துகளை தமிழக போக்குவரத்துக் கழகம் இயக்கி வருகிறது.
அந்த வகையில் வரும் மார்ச் 29ஆம் தேதி புனித வெள்ளி கொண்டாடப்பட இருப்பதால், வார இறுதி சனி, ஞாயிறு சேர்த்து தொடர் விடுமுறை வழங்க வாய்ப்புள்ளது. இதையடுத்து சென்னை கிளாம்பாக்கத்தில் இருந்து மார்ச் 28ல் 505 சிறப்பு பேருந்துகளும், மார்ச் 29ல் 300 பேருந்துகளும் மற்றும் மார்ச் 30 அன்று 345 சிறப்பு பேருந்துகளும் இயக்கப்பட இருப்பதாக அறிவித்துள்ளனர்.
Enewz Tamil இன்ஸ்டாகிராம்
இல்லத்தரசிகளே.., விஜய் டிவியில் முடிவுக்கு வரும் பாக்கியலட்சுமி சீரியல்?? லீக்கான தகவல்!!!