விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பாக்கியலட்சுமி சீரியல் இப்போது பல அதிரடியான கதைக்களத்துடன் நகர்ந்து கொண்டுள்ளது. இத்தனை நாள் எழில் வாழ்க்கையில் அடுத்தடுத்து பிரச்சனை வந்து கொண்டிருந்த நிலையில் இப்போது அது ஒட்டுமொத்தமாக முடிந்துவிட்டது. அடுத்ததாக செழியன் வாழ்க்கையை சரி செய்ய பாக்கியா பல முயற்சிகளை எடுத்து வருகிறார். இப்படி இருக்கையில் இந்த சீரியல் குறித்து ஒரு அப்டேட் வெளியாகியுள்ளது. அதாவது பாக்கியலட்சுமி சீரியல் விரைவில் முடிவுக்கு வர உள்ளதாகவும் அதற்கு பதில் வேற ஒரு புத்தன் புத்தம் புதிய தொடர் ஒளிபரப்பாக இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
அதாவது இப்போது பாக்கியலட்சுமி சீரியலில் அடுத்தடுத்து பிரச்சனைகள் சரியாகிய வண்ணம் உள்ளது. இன்னும் கோபி மட்டும் தான் எதையுமே புரிந்து கொள்ளாமல் பேசிக் கொண்டிருக்கிறார். அவரும் பாக்கியாவை புரிந்து கொண்டால் அனைத்து பிரச்சனைகளும் முடிவுக்கு வந்து சீரியலுக்கு சுபம் போட வேண்டியதுதான் பாக்கி. பல ரசிகர்களும் இந்த சீரியல் எப்போது முடிவுக்கு வரும் என்ற எதிர்பார்ப்பில் தான் உள்ளனர். எனவே இது குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.