தமிழகத்தில் கர்ப்பிணி பெண்களுக்கு உதவித்தொகை., வெளியான முக்கிய அறிவிப்பு இதோ!!!

0
தமிழகத்தில் கர்ப்பிணி பெண்களுக்கு உதவித்தொகை., வெளியான முக்கிய அறிவிப்பு இதோ!!!
நாடு முழுவதும் பெண்களை ஊக்குவிக்கும் வகையில் மத்திய மற்றும் மாநில அரசுகள் பல சலுகைகளை வழங்கி வருகிறது. அந்த வகையில் கர்ப்பிணி பெண்களுக்கு மத்திய மற்றும் அந்த மாநில அரசு பல உதவித்தொகைகளை அறிவித்து வருகிறது. அந்த வகையில் இப்போது தமிழகத்தின் உள்ள கர்ப்பிணி பெண்களுக்கு உதவி தொகை குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதாவது இனி வரும் நாட்களில் கர்ப்பிணி பெண்களுக்கு ரூபாய் 14,000 உதவித்தொகையாக வழங்கப்படும். இத்துடன் ரூபாய் 2000 மதிப்புள்ள பெட்டகங்களும் அரசு சார்பில் இரண்டு முறை வழங்கப்படும்.
இந்த 14,000 ரூபாய் உதவித்தொகை 4 தவணையாக வழங்கப்படும். அதன்படி பிரசவத்தை பதிவு செய்யும் கர்ப்பிணி பெண்களின் வங்கி கணக்கில் ரூபாய் 2000 வரவு வைக்கப்படும். அதன் பின் நான்காவது மாதத்திற்கு பிறகு இரண்டாவது தவணையாக ரூபாய் 2000 வரவு வைக்கப்படும். மூன்றாவது தவணையாக ரூபாய் 4000 குழந்தை பிறந்து அதற்கு தடுப்பூசி போடும் போது வழங்கப்படும். நான்காவது தவணையாக ரூபாய் 4000 குழந்தைக்கு 9 வது மாதம் முடிந்தவுடன் வழங்கப்படும் என தெரிவித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here