தென்தமிழக பகுதிகளில் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் ஆகிய பகுதிகளில் ஏற்பட இருக்கும் வானிலை மாற்றம் குறித்து, சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது. அதாவது, இன்று (அக்டோபர் 14) முதல் அக்டோபர் 20 ஆம் தேதி வரை, தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் ஆகிய பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்ய அதிக வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
Enewz Tamil WhatsApp Channel
இதில் சென்னையை பொறுத்த வரையில், அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடனே இருக்குமே தவிர ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும். மேலும், அரபிக்கடலின் லட்சத்தீவுகளை ஒட்டிய தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும் என்பதால் இந்த பகுதிகளுக்கு மட்டும் அக்டோபர் 14 (இன்று) மற்றும் 15 தேதிகளில் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்று வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது.