கடந்த ஒரு வார தினங்களாக இஸ்ரேல் – ஹமாஸ் குழுவினர் இடையே போர் தீவிரமாகி வருகிறது. இதனால் இஸ்ரேல் ராணுவ அமைப்பினர் காசா மீது குண்டுகளை வீசி வருவதால், அங்கு பெண்கள், குழந்தைகள் என 2,000 பேர் உயிரிழந்துள்ளதாக ஐ.நா. தெரிவித்துள்ளது. இதையடுத்து காசாவுக்கு ஆதரவாக ஈரான், ஈராக் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து பல்வேறு அமைப்புகளும் போரில் களமிறங்குவோம் என தெரிவித்து வருகின்றனர்.
Enewz Tamil WhatsApp Channel
இப்படி பதட்டமான சூழ்நிலையில் காசாவில் 7,900க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளதால் உரிய மருத்துவ சிகிச்சை பெற முடியாமல் தவித்து வருவதாக கூறியுள்ளனர். இந்த அறிவிப்பு உலக நாடுகளிடையே பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.