தென்மேற்கு வங்கக் கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவி வருவதால் தமிழகத்தில் அடுத்த ஒரு வாரத்திற்கு ஏற்படும் வானிலை மாற்றம் குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதாவது, இன்று (டிசம்பர் 15) முதல் வரும் டிசம்பர் 21 ஆம் தேதி வரை தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் ஆகிய பகுதிகளில் இடியுடன் கூடிய கனமழை பெய்ய அதிக வாய்ப்பு உள்ளதாக அறிவித்துள்ளது.
சென்னையை பொறுத்த வரையில், இந்த குறிப்பிட்ட நாட்களில் ஒரு சில இடங்களில் மிதமான மழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், தமிழக கடலோரப் பகுதிகளில் இன்று (டிசம்பர் 15) முதல் டிசம்பர் 18 ஆம் தேதி வரை மணிக்கு 55 கிலோ மீட்டர் வேகத்தில் சூறாவளி காற்று வீசக்கூடும் என்பதாலும், அரபிக் கடல் பகுதிகளை ஒட்டிய கேரளா கடலோரத்தில் டிசம்பர் 17 மற்றும் 18 ஆகிய தேதிகளில் சூறாவளி காற்று வீசக்கூடும் என்பதாலும், மீனவர்களுக்கு எச்சரிக்கை அளிக்கப்பட்டு மேற்குறிப்பிட்ட நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Enewz Tamil WhatsApp Channel
விஷ்ணு கூடவே இருந்து ஆப்பு வச்சுருவாரு.., உண்மையை பளிச்சென்று உடைத்த மாயா.., BB ப்ரோமோ!!!