வெப்பச்சலனம் மற்றும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் இன்று முதல் அடுத்த 3 நாட்களுக்கு கீழ் குறிப்பிட்டுள்ள மாவட்டங்களில் பரவலாக மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் கோடை காலம் முடிந்த நிலையில் கடந்த சில நாட்களாகவே பல மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. இந்நிலையில் வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட தற்போது வெளியிட்ட விவரங்களின் அடிப்படையில் தமிழகத்தில் இன்று முதல் அடுத்த மூன்று நாட்கள் அதாவது ஆகஸ்ட் 19 ஆம் தேதி வரை மழை பெய்யும்.
இந்த நாட்களில் நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல், திருப்பூர், தென்காசி ஆகிய மாவட்டங்களில் பரவலாக மழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே போல புதுவை, காரைக்கால் ஆகிய இடங்களை ஒட்டியுள்ள பகுதிகளில் சில இடங்களில் இடி மின்னலுடன் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னையில் இன்று ஏற்கனவே சில இடங்களில் அதிகாலை முதல் மிதமான மழை பெய்து வரும் நிலையில், அடுத்த 48 மணி நேரத்தில் சென்னையின் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தற்போது அறிக்கையை வெளியிட்டுள்ளது.
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்