தமிழகத்தில் கடந்த அக்டோபர் 31ஆம் தேதி வரை எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின்படி, 67.23 லட்சம் பேர் பதிவு செய்துவிட்டு அரசு வேலைக்காக காத்திருப்பதாக ஷாக் ரிப்போர்ட் வெளியாகியுள்ளது.
ரிப்போர்ட் வெளியீடு :
தமிழகத்தில் கொரோனா காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக, அரசு சம்பந்தப்பட்ட காலி பணியிடங்கள் நிரப்பப்படவில்லை. இதனால், அரசு இயந்திரத்தில் மிகப்பெரிய, தொய்வு ஏற்பட்டது. கடந்த ஒரு ஆண்டாக, மீண்டும் காலி பணியிடங்களுக்கான போட்டித் தேர்வு நடத்தப்பட்டு காலி பணியிடங்கள் நிரப்பப்பட்டு
வருகிறது.
ஓய்வூதியதாரர்கள் கவனத்திற்கு – ஒரு முறை மட்டும் தான் இந்த வாய்ப்பு! 40% தொகை உறுதி!!
குறிப்பிட்ட இந்த காலகட்டத்தில், ஏற்பட்ட இந்த பின்னடைவு காரணமாக தமிழகத்தில் வேலைவாய்ப்பின்மை மிகவும் அதிகரித்தது. அந்த வகையில் கடந்த அக்டோபர் 31ஆம் தேதி வரை எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின்படி, 61.23 லட்சம் பேர் பதிவு செய்துவிட்டு அரசு வேலைக்காக காத்திருக்கின்றனர்.
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இதில் 31.40 லட்சம் ஆண்களும், 35.82 லட்சம் பெண்களும், 268 மூன்றாம் பாலினத்தவரும் அடங்குவார்கள் என அறிக்கை வெளியாகி உள்ளது. கிட்டத்தட்ட, அரை கோடி நபர்களுக்கு மேல் அரசு வேலைக்காக காத்திருப்பதாக அறிக்கையை வெளியாகி இருப்பது, மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.