தொடர்ந்து மாறி வரும் பருவ நிலை காரணமாக நாடு முழுவதும் உள்ள பல இடங்களில் மழை பெய்து வருகிறது. இந்த வகையில் தமிழகத்தை நோக்கி வீசும் மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு நிலவுவதால் இன்று (செப்டம்பர் 11) தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியின் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மழைக்கு அதிக வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
மேலும், அடுத்த ஒரு வாரத்திற்கு இந்த மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு நிலவும் என்பதால் இன்று முதல் செப்டம்பர் 16 ஆம் தேதி வரை தமிழகத்தில் மிதமானது முதல் லேசானது வரை மழை பெய்ய கூடும். இந்த வானிலை மாற்றத்தால், சென்னையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடனே இருக்குமே தவிர ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
பி.எம்.கிசான் திட்டம்.., விவசாயிகளே இதை செய்யலனா ரூ.2000 கிடைக்காது.., அரசு அறிவிப்பு!!