தமிழகத்தில், அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவர்களுக்கான காலாண்டு தேர்வு அட்டவணையை சமீபத்தில் பள்ளி கல்வித் துறை வெளியிட்டது. இதன்படி, 6 ஆம் வகுப்பு முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு வரும் செப்டம்பர் 19 ஆம் தேதி முதல் செப்டம்பர் 27 ஆம் தேதி வரையும், பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 மாணவர்களுக்கு செப்டம்பர் 15 ஆம் தேதி முதல் செப்டம்பர் 27 ஆம் தேதி வரையும் காலாண்டுத் தேர்வு நடைபெற இருக்கிறது.
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
இந்த தேர்வை வழக்கம் போல் இல்லாமல், பொது வினாத்தாள் முறையை பின்பற்றி நடத்த அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும் பள்ளி கல்வித்துறை சுற்றறிக்கை அனுப்பி உள்ளது. இதன் மூலம் பொது தேர்வை போலவே, காலாண்டு தேர்வு நடைபெற கூடும். இந்த தேர்வு முடிந்த பிறகு, 3 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு செப்டம்பர் 23 ஆம் தேதி முதலும், 4 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு செப்டம்பர் 28 ஆம் தேதி முதலும், காலாண்டு விடுமுறை வழங்கப்பட உள்ளது. அடுத்த பள்ளித் திறப்பானது, அக்டோபர் 3 ஆம் தேதி என அறிவிப்பு வெளியாகியுள்ளது.
தமிழகத்தில் இந்த மாநகராட்சி வீட்டு உரிமையாளர்களுக்கு ஊக்கத்தொகை., வெளியான முக்கிய அறிவிப்பு!!!