கொரோனா தொற்று காரணமாக ஊரடங்கு நடைமுறையில் உள்ளதால் பள்ளிகள் திறக்கப்படாத நிலையில், அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் அலுவலக பணியாளர்களையும் 14-ம் தேதி முதல் பணிக்கு வர பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.இந்த அறிவிப்பால் பள்ளிகள் விரைவில் திறக்கப்படுமோ என்ற கேள்வி மாணவர்கள் மற்றும் பெற்றோர் மத்தியில் எழுந்து உள்ளது.
ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!
கொரோனா பரவல் அதிகமாக இருந்த நிலையில் நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. பரவல் மேலும் அதிகமாகிவிடக்கூடாது என்பதை கருத்தில் கொண்டு பள்ளிகள் ஏற்கனவே அடைக்கப்பட்டது. இந்நிலையில் 12ம் வகுப்பு பொது தேர்வு ரத்து செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதனையடுத்து பள்ளிக்கல்வித்துறை ஒரு முக்கிய அறிவிப்பை தற்போது வெளியிட்டு உள்ளது.
அதாவது, மாணவர்களுக்கான மதிப்பெண் சான்றிதழ்கள்,விலையில்லா பாடப்புத்தகங்கள் , மேலும் கற்றல் கற்பித்தலுக்கு தேவையான பல நலத் திட்டங்களை செயல்படுத்த வேண்டி உள்ளதாலும், புதிய கல்வி ஆண்டிற்கான மாணவர் சேர்க்கை தொடங்க வேண்டும் என்பதாலும், அதற்கு முன்பாக பள்ளி வளாகம் மற்றும் வகுப்பறையை தூய்மைப்படுத்தும் பணிகள் உட்பட பள்ளி சார்ந்த பல பணிகள் மேற்கொள்ளவேண்டி உள்ளதால் அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் அலுவலக பணியாளர்களையும் வருகிற 14-ம் தேதி முதல் பள்ளிக்கு வர பள்ளிக்கல்வித்துறை உத்தரவு பிறப்பித்து உள்ளது.
Facebook => Like செய்ய கிளிக் பண்ணுங்க!!