இன்று முதல் பஸ் ஓடும் – போக்குவரத்து மந்திரி அதிரடி அறிவிப்பு!!!

0

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக கேரளாவில் பல மாதங்களாக நிறுத்திவைக்கப்பட்டிருந்த பஸ் போக்குவரத்து இன்று காலை முதல் மீண்டும் தொடங்கியது என்று போக்குவரத்து துறை மந்திரி ஆன்டனி ராஜு தெரிவித்துள்ளார்.

Youtube  => Subscribe செய்ய கிளிக் பண்ணுங்க!!

இன்று முதல் பஸ் ஓடும்:

இந்தியாவில் உச்சம் தொட்டுள்ள கொரோனா பரவல் தென்னிந்தியாவிலும் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தியது, கேரளாவில் சற்று குறைந்திருந்த கொரோனா பாதிப்பு சமீபத்திய நாட்களில் எதிர்பாராத வகையில் அதிகரித்துள்ளது. கேரளாவில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் வகையில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.

இந்த நிலையில் கொரோனா பாதிப்பு தற்போது 20 ஆயிரத்துக்கும் கீழே வருகிறது. படிப்படியாக தொற்று குறைந்து வருவதால் தளர்வுகள் அறிவிக்கப்படுகிறது. தற்போது மாநிலங்களுக்கிடையிலான பேருந்து போக்குவரத்துக்கு தடை இல்லை எனவும்,  இன்று முதல் அரசு பஸ் போக்குவரத்து இயக்கப்படுகிறது என்று போக்குவரத்து துறை மந்திரி ஆன்டனி ராஜு தெரிவித்துள்ளார்.

அதன் படி நீண்ட தூர பஸ்கள் இன்று இயக்கப்படும் என்றும், இதனை தொடர்ந்து  படிப்படியாக அனைத்து பகுதிகளுக்கும் பஸ்களை இயக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ராஜு தெரிவித்துள்ளார். மேலும் நீண்ட தூர பயணத்திற்கான ஆன்லைன் முன்பதிவு தொடங்கப்பட்டுள்ளது.

Telegram Channel  => Join செய்ய கிளிக் பண்ணுங்க!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here