தமிழகத்தில், 6 முதல் 9ம் வகுப்பு வரையிலான பள்ளி மாணவர்களுக்கு இனி, சிறார்களுக்கு என்று ஒதுக்கப்பட்ட திரைப்படங்களைக் காண பள்ளியிலேயே திரைப்படங்கள் திரையிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கல்வித்துறை அறிவிப்பு:
கொரோனாவுக்கு பின், பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளதால் மாணவர்களுக்கு பல்வேறு சலுகைகள் அறிவிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், மாணவர்கள் மன அழுத்தத்தை போக்க கவுன்சிலிங் வகுப்புகள் தொடர்ந்து கல்வித்துறையில் நடத்தப்படுகிறது.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
தற்போது, மாணவர்களின் மன அழுத்தத்தை குறைப்பதற்காக சிறார்களுக்கென்று எடுக்கப்படும் திரைப்படங்களை பள்ளியில் காண கல்வித்துறை ஏற்பாடு செய்துள்ளது. ஒவ்வொரு மாதமும் 2வது வாரம் இதற்கான பாட வேளை ஒதுக்கப்பட்டு, 6 முதல் 9 வகுப்பு வரையிலான மாணவர்கள் இந்த சிறார் திரைப்படத்தை காண அனுமதிக்கப்படுவர்.
இதற்கென்று ஒவ்வொரு பள்ளியிலும், அனுபமிக்க ஒரு ஆசிரியர் நியமிக்கப்பட்டு மாணவர்களுக்கு படங்கள் திரையிடப்பட உள்ளது. இந்த திரைப்படத்தை பார்த்து திரை விமர்சனம் எழுதும் மாணவர்களுக்கு மாவட்ட, மாநில அளவில் போட்டிகளும் நடத்தப்பட உள்ளது. இந்த அறிவிப்பை அடுத்து மாணவர்கள் பலத்த உற்சாகத்தில் உள்ளனர்.