தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு பொதுத்தேர்வு மற்றும் முழு ஆண்டு தேர்வு நடந்து முடிந்து கோடை விடுமுறை விடப்பட்டுள்ளது. கிட்டத்தட்ட விடுமுறை முடிவடையும் தருவாயில் உள்ளது. வெயிலின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில் சில மாநிலங்களில் பள்ளிகள் திறப்பு தள்ளிவைக்கப்பட்டிருந்தது.
அதனை தொடர்ந்து தமிழகத்தில் கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டதால், அன்பில் மகேஷ் முதல்வருடன் ஆலோசனை நடத்தி ஜூன் 7 ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று அறிவித்திருந்தார். இந்நிலையில் இதற்கு மேலும் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை நீடிக்கப்படுமா?? என்ற கேள்வி அதிகமாக எழுந்து வருகிறது.
ஏனெனில் அக்கினி நட்சத்திரம் முடிவுக்கு வந்த நிலையிலும் வெயில் தாக்கம் குறைந்த பாடில்லை. இதனால் விடுமுறையை மேலும் நீடிக்கும்படி கோரிக்கை எழுந்து வருகின்றனர். ஆனால் இதற்கு மேல் பள்ளிகள் திறப்பு ஒத்திவைக்கப்பட வாய்ப்பில்லை. சொன்னபடி ஜூன் 7 ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்ற அறிவிப்பு வெளியாகியுள்ளது.