தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் கனமழை வெளுத்து வாங்கும் – வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு!!

0
தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் கனமழை வெளுத்து வாங்கும் - வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு!!

தமிழகத்தில் உள்ள சில முக்கிய பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி மற்றும் வெப்ப சலனம் காரணமாக ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்து வருகிறது. இதனால் மக்கள் வெப்பத்தில் இருந்து தப்பித்த சந்தோஷத்தில் இருந்து வருகின்றனர். இந்நிலையில் அடுத்த மூன்று மணி நேரத்தில் மழை பெய்ய இருக்கும் மாவட்டங்கள் குறித்து வானிலை ஆய்வு மையம் ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

இது தொடர்பாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, அடுத்த 3 மணி நேரத்தில் தமிழகத்தின் முக்கிய பகுதிகளான மதுரை, திண்டுக்கல், கரூர், ஈரோடு, கோவை, நீலகிரி, திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, சேலம், பெரம்பலூர், நாகை, திருவாரூர், விருதுநகர், தர்மபுரி, திருப்பூர், நெல்லை, கன்னியாகுமரி, தேனி மற்றும் தென்காசி ஆகிய 20 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.

தமிழக பள்ளிகளுக்கு கோடை விடுமுறை மேலும் நீடிப்பு?? வெளிவந்த முக்கிய தகவல்!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here