தமிழகத்தில் வைரஸ் காய்ச்சல், குழந்தைகளிடையே மீண்டும் அதிதீவிரமாக பரவி வருவதால் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்க வேண்டும் என்ற கோரிக்கை, வலுத்து வருகிறது.
வலுக்கும் கோரிக்கை:
தமிழகத்தில் கொரோனா பரவலுக்கு பின் பள்ளிகள் திறக்கப்பட்டு, கடந்த 2 ஆண்டுகளாக நேரடி வகுப்புகள் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், மாணவர்களுக்கு காலாண்டு தேர்வு அடுத்த வாரம் தொடங்க உள்ளது. இந்த நிலையில், தமிழகம் முழுவதும் இன்ஃப்ளுயன்சா என்ற பன்றி காய்ச்சல் குழந்தைகளிடையே அதிதீவிரமாக பரவி வருகிறது. இதுவரை 280 க்கும் மேற்பட்ட குழந்தைகள், இந்த காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த நிலையை சரி செய்ய, நம் அண்டை மாநிலமான புதுவையில் 1 முதல் 8ம் வகுப்பு வரையிலான பள்ளி மாணவர்களுக்கு 25ஆம் தேதி வரை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து, 1 முதல் 9ஆம் வகுப்பு வரையிலான பள்ளி மாணவர்களுக்கு விடுமுறை அளிக்க வேண்டும் என கோரிக்கை வலுத்து வருகிறது.
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
மழைக்காலம் இனி வர இருப்பதால், மாணவர்களின் உடல் நிலை கருதி அரசு இதுகுறித்து விரைந்து முடிவெடுக்க வேண்டும் எனவும், இந்த வைரஸ் காய்ச்சல் குறைந்த பிறகு பள்ளிகளை மீண்டும் திறக்கலாம் என்றும் பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.