தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் அனைத்து பள்ளிகளுக்கும் அரையாண்டு தேர்வு குறித்த அறிவிப்பை பள்ளிக் கல்வித் துறையானது சமீபத்தில் வெளியிட்டது. இதன்படி, 6 முதல் 10 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு வரும் டிசம்பர் 11 ஆம் முதல் டிசம்பர் 21 ஆம் தேதி வரையிலும், பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 மாணவர்களுக்கு, டிசம்பர் 7 முதல் டிசம்பர் 22 ஆம் தேதி வரையிலும் அரையாண்டு தேர்வு நடைபெறும் என அறிவித்தது.
Enewz Tamil WhatsApp Channel
இந்நிலையில், பள்ளிக் கல்வி துறையானது அனைத்து முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் சுற்றறிக்கை ஒன்றை அனுப்பி உள்ளது. அதாவது, அரையாண்டு தேர்வானது வழக்கம் போல் இல்லாமல், பொது வினாத்தாள் முறையில் நடத்த வேண்டும். இதன்படி, 6 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு கல்வியியல் ஆராய்ச்சி பயிற்சி நிறுவனம் பொது வினாத்தாளை வடிவமைக்கும் என அறிவித்துள்ளது.
சபரிமலை பக்தர்களுக்கு குட் நியூஸ்., தரிசன நேர மாற்றம்? வெளியான முக்கிய அறிவிப்பு!!!