உலகப்பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல பூஜைக்காக நடை திறக்கப்பட்டு தரிசனம் செய்ய பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். இதனால் தமிழ்நாடு, ஆந்திரா, கேரளா என பல்வேறு மாநிலத்தை சேர்ந்த எண்ணற்ற பக்தர்கள் அனுதினமும் ஐயனை தரிசிக்க இருமுடி ஏந்தி வந்த வண்ணம் உள்ளனர். இதனை கருத்தில் கொண்டு நடை திறக்கப்படும் நேரத்தை மாற்றி அமைந்துள்ளதாக தகவல் தெரிவித்துள்ளனர்.
Enewz Tamil WhatsApp Channel
வழக்கமாக 14 மணி நேரம் பக்தர்களுக்கு தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்ட நிலையில், கூடுதலான பக்தர்கள் வருகையை அடுத்து தரிசன நேரத்தை 16 மணி நேரமாக மாற்றி அமைந்துள்ளதாக தெரிவித்துள்ளனர். அதன்படி அதிகாலை 3 மணிக்கே நடை திறக்கப்பட்டு பக்தர்கள் அனுமதிக்கப்படுவதாக குறிப்பிட்டுள்ளனர்.