
நாடு முழுவதும் ரேஷன் அட்டைதாரர்களுக்கு பல்வேறு அறிவிப்புகள் வெளியாகி வண்ணம் உள்ளது. அந்த வகையில் தற்போது ரேஷன் அட்டைதாரர்கள் கார்டை ஆதார் எண்ணுடன் இணைக்க மத்திய மற்றும் மாநில அரசு வலியுறுத்தி வருகின்றனர். இந்நிலையில் தற்போது ஒரு முக்கிய அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதாவது டிசம்பர் 31 ஆம் தேதிக்குள் அனைத்து ரேஷன் அட்டைதாரர்களும் கார்டை ஆதாரத்துடன் இணைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Enewz Tamil WhatsApp Channel
மேலும் இந்த வாய்ப்பையும் அவர்கள் தவறவிட்டால் ஜனவரி ஒன்றாம் தேதி முதல் அவர்களுக்கு ரேஷன் பொருட்கள் கிடைக்காது என தெரிவித்துள்ளனர். அதுமட்டுமல்லாமல் ஆதார் கார்டுடன், ரேஷன் கார்டை இணைக்க வில்லை என்றால் மத்திய அரசின் ஸ்ரீ ரஷ்மி யோஜனா திட்டத்தின் கீழ் கிடைக்கும் பலன்களை பெற முடியாது என்றும் திட்டவட்டமாக தெரிவித்துள்ளனர்.