தமிழக அரசு பள்ளியில் பயிலும் மாணவர்கள் கல்வியில் மட்டுமல்லாமல் கலை, இலக்கியம், விளையாட்டு போன்ற பல துறைகளிலும் சாதிக்க வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் சமீபத்தில் தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு பள்ளிகளுக்கும் சுற்றறிக்கை ஒன்றை பள்ளி கல்வித்துறை அனுப்பியது. அதில் ஒவ்வொரு அரசு பள்ளிகளிலும் ஆண்டு விழா வருடம் தோறும் கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் 2023-24 ஆம் கல்வி ஆண்டிற்கான ஆண்டு விழாவை தமிழகத்தில் உள்ள மொத்தம் 37,576 அரசு பள்ளிகளில் பிப்ரவரி 10ஆம் தேதிக்குள் நடத்தி முடிக்க வேண்டும் என உத்தரவிட்டிருந்தனர்.
தற்போது இதைத்தொடர்ந்து மற்றொரு அறிவிப்பையும் வெளியிட்டுள்ளனர். அதாவது இந்த ஆண்டு விழாவிற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள், மாவட்ட கல்வி அலுவலர்கள் மேற்கொள்ள வேண்டும் என கூறப்பட்டிருந்தது. இந்நிலையில் ஆண்டு விழா நடைபெறும் அனைத்து பள்ளிகளுக்கும் மொத்தம் 15 கோடி தமிழக அரசு நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. மேலும் இந்த நிதி தொடக்கப் பள்ளிகள், உயர்நிலைப் பள்ளிகள், நடுநிலைப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப நிதி ஒதுக்கீடு செய்யப்படும். இதை வைத்து பள்ளி ஆண்டு விழாவை வெகு விமர்சையாக நடத்த வேண்டும் என உத்தரவிட்டுள்ளனர்.