தமிழக மக்களுக்கு பொங்கல் பரிசாக ரூ.1000., முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு!!

0
தமிழக மக்களுக்கு பொங்கல் பரிசாக ரூ.1000., முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு!!
தமிழக மக்களுக்கு பொங்கல் பரிசாக ரூ.1000., முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு!!

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழகத்தில் உள்ள அனைத்து ரேஷன் கார்டுதாரர்களுக்கும், ரூபாய் 1000 ரொக்கத்துடன் பச்சரிசி மற்றும் சர்க்கரை வழங்கப்படும் என முதல்வர் அறிவித்துள்ளார்.

பொங்கல் பரிசு:

தமிழகத்தில், பொங்கல் பண்டிகையை முன்னிட்டு குடும்ப அட்டைதாரர்களுக்கு, எவ்வளவு பணப்பரிசு வழங்கப்படும் என்று அறிவிப்பு, தொடர்ந்து இருந்து வந்தது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

தற்போது, பொதுமக்களின் சந்தேகத்தை தீர்க்கும் விதமாக, மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பத்தினர் உள்ளிட்ட அனைவருக்கும், ரூபாய் 1000 வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ரொக்கத்துடன் ஒரு கிலோ பச்சரிசி மற்றும் சர்க்கரை வழங்கப்படும் என முதல்வர் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார்.

T20 யின் கேப்டனான ஹர்திக் பாண்டியா?? ரோஹித் இனி அவ்வளவு தானா??

அரசின் இந்த அறிவிப்பால், மாநிலம் முழுவதும் உள்ள 2.19 கோடி குடும்ப அட்டைதாரர்கள் பயன் பெறுவார்கள் என்றும், இதற்காக அரசுக்கு சுமார் ரூ. 2,356.67 கோடி செலவு ஏற்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தை 02.01.2023 அன்று, முதல்வர் தொடங்கி வைப்பார் என தமிழக அரசின் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here