தமிழகத்தில், எந்த ரேஷன் கார்டு தாரர்களுக்கு ரூ.1000 உரிமைத் தொகை வழங்கப்படும் என்ற அறிவிப்பை அரசு வெளியிட்டுள்ளது.
வெளியான அறிவிப்பு:
தமிழகத்தில், இல்லத்தலைவி களுக்கு மாதம் ரூபாய் 1000 உரிமை தொகை வழங்கப்படும் என்ற அறிவிப்பு, திமுக தேர்தல் அறிக்கையின் பரப்புரையில் தெரிவிக்கப்பட்டது. தற்போது 20 மாதங்களாகியும் இந்த திட்டம் இன்னும் செயல்படுத்தப்படவில்லை. வருகிற சட்டப்பேரவை கூட்டத்தொடரில் இது சார்ந்த அறிவிப்பு வெளியிட உள்ளதாக ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
கிட்டத்தட்ட இத்திட்டம் வரும் ஜூன் 3ஆம் தேதி, கலைஞர் பிறந்த நாளன்று தொடங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில், இந்த உரிமை தொகை PHH என்ற வறுமை கோட்டுக்கு கீழ் உள்ள ரேஷன் பயனர்களுக்கும் மற்றும் 35 கிலோ அரிசி வாங்கும் PHAAY ரேஷன் பயனர்களுக்கும் கிடைக்கும்.
ரயில் பயணிகளுக்கு இலவச அதிவேக இன்டர்நெட்., ரயில்வே கொடுத்த ஷாக்கிங் சர்ப்ரைஸ்!!
இதேபோல், முதியோர் உதவித்தொகை வாங்கும் 60 வயதுக்கு மேற்பட்ட தாய்மார்களுக்கும், புதுமைப்பெண் திட்டத்தில் பயனடையும் கல்லூரி மாணவிகளின் தாய்மார்களுக்கும் இத்தொகை கிடைப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆனால் அரசு அலுவலர்களுக்கு இத்தொகை கிடைக்க வாய்ப்பில்லை. இதற்காக பயனர்கள், ரேஷன் கார்டில் எந்த அப்டேட்டையும் செய்ய தேவையில்லை. தகுதி வாய்ந்த நபர்களுக்கு அரசே இத்தொகையை வழங்கும் என்பது உறுதியாகியுள்ளது.