தமிழக ரேஷன் அட்டைதாரர்களில் இதுவரை வங்கிக் கணக்கு இல்லாதோருக்கு, புதிதாக கணக்கு தொடங்க அறிவுறுத்தப்பட்டுள்ள நிலையில், இது குறித்த முக்கிய உத்தரவு ஒன்று பிறப்பிக்கப்பட்டுள்ளது.
முக்கிய உத்தரவு :
தமிழகத்தில் உள்ள 2.20 கோடி ரேஷன் கார்டுதாரர்களில், 14.60 லட்சம் நபர்களுக்கு, இதுவரை வங்கிக் கணக்கு இல்லை என்ற விவரம் தமிழக அரசால், சமீபத்தில் கண்டறியப்பட்டது. இதையடுத்து வரும் பொங்கலுக்கு குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூபாய் 1000 வழங்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது.
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
இந்தத் தொகையை பயனர்களின் வங்கி கணக்கில் நேரடியாக செலுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக வங்கி கணக்கு இல்லாத பயனர்கள், ஏதேனும் ஒரு கூட்டுறவு வங்கியில் புதிய வங்கி கணக்கு துவங்க வேண்டும் என அறிவுறுத்தி இருந்தது. அந்த வகையில், ஏற்கனவே வங்கி கணக்கு வைத்திருப்போர் வங்கி கணக்குடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டது.
இது சம்மந்தமாக ரேஷன் கடை பணியாளர்கள் பயனர்களை நேரில் சந்தித்து, இந்த இணைப்பை செய்ய சொன்னால் மட்டும் போதுமானது என்றும், வேறு எந்த விவரங்களையும் கேட்கக் கூடாது என்றும் அனைத்து மண்டல பதிவாளர்களுக்கும் கூட்டுறவுத்துறை பதிவாளர் சுற்றறிக்கை அனுப்பி உள்ளார்.