தமிழகத்தில் தொடர்ந்து ஒரு வாரம் மூடப்படும் பள்ளிகள் – போராட்டம் நடத்தப்போவதாக அதிரடி அறிவிப்பு!!

0
தமிழகத்தில் அசுர வேகமெடுக்கும் கொரோனா - பள்ளிகள் திறப்பில் அதிரடி மாற்றம்? அமைச்சர் விளக்கம்!!
மாநிலம் முழுவதும்  5ம் வகுப்பு வரை பள்ளி மாணவர்களுக்கு விடுமுறை - அரசுக்கு திடீர் கோரிக்கை!!

தமிழகத்தில் உள்ள, அனைத்து தனியார் பள்ளிகளும் அடுத்த கல்வியாண்டில், அதாவது வருகிற ஜூன் மாதத்தில் ஒரு வாரம் தொடர்ந்து மூடப்பட்டு போராட்டம் நடத்தப்படும், என தனியார் பள்ளிகள் சங்கம் அறிவித்துள்ளது.

 போராட்டம் அறிவிப்பு :

கொரோனா 3ம் அலை பரவலுக்கு பின், தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளும் கடந்த பிப்ரவரி 1ஆம் தேதி முதல் திறக்கப்பட்டு, நேரடி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு கட்டாயம் 10, 11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வு நடத்தப்படும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்தது. இதையடுத்து, மாணவர்கள் தேர்வுக்கு தயாராகி வருகின்றனர். இந்த நிலையில், கொரோனா  கால கட்டத்தில் தனியார் பள்ளிகள் அதிக கட்டணம் வசூல் செய்வதாக எழுந்த புகாரை அடுத்து பள்ளிக்கல்வித்துறை, தனியார் பள்ளிகளுக்கு எச்சரிக்கை விடுத்தது.

இந்த நிலையில் மாநிலத்தில் இதுவரை அனுமதி பெறாமல் 25 மெட்ரிகுலேஷன் பள்ளிகளும், 390 நர்சரி மற்றும் பிரைமரி பள்ளிகளும் நடத்தப்பட்டு வருவதால், இந்த பள்ளிகள் அனைத்தும் மூடப்பட உள்ளதாக தமிழக அரசு அறிவித்தது. அரசின் இந்த முடிவை எதிர்த்து, தனியார் பள்ளிகள் வருகிற ஜூன் மாதத்தில் ஒரு வாரம் தொடர்ந்து போராட்டம் நடத்தப் போவதாக அறிவித்துள்ளது. இந்த போராட்டத்தில் பிரைமரி, சிபிஎஸ்சி, மெட்ரிகுலேஷன் உள்ளிட்ட பள்ளிகள் பங்கேற்கும் என அந்த சங்கம் தெரிவித்துள்ளது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here