தமிழக மக்களே உஷார்.,, அடுத்த 3 மணி நேரத்தில் மழை கொட்டப்போகுது.,, வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!!

0

தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் 6 மாவட்டங்களில், ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

மழைக்கு வாய்ப்பு:

வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால், தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்து வருகிறது. மேலும் கடந்த 1 வாரத்தில் மாநிலத்தின் பல்வேறு இடங்களில் கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக சென்னையில் மழை கொட்டித் தீர்த்தது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

மேலும் மாநிலத்தில் பெய்த கனமழையால் பயிர்கள் அனைத்தும் நீரில் மூழ்கி வீணாகி விட்டது. இதுமட்டுமல்லாமல் வெள்ள நீர் சூழ்ந்து சாலை போக்குவரத்தும் பாதிப்படைந்து உள்ளது. இதையடுத்து வெள்ள நீரை வெளியேற்றும் பணியும் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் அடுத்த மூன்று மணி நேரத்தில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

பிக்பாஸ் வீட்டில் முளைத்த அடுத்த காதல்.., சூசகமாக காதலை வெளிப்படுத்திய சிவின்!!

இது குறித்து வெளியான அறிக்கையில், இன்று தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் கோவை, நெல்லை, தூத்துக்குடி, திருப்பூர், கன்னியாகுமரி, திண்டுக்கல் ஆகிய 6 மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். எனவே பொதுமக்கள் வெளியில் செல்லும் போது மிகவும் கவனமாக செல்ல வேண்டும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here