தமிழகத்தில் நீலகிரி, கோவை, திண்டுக்கல்,உள்ளிட்ட 15 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது.
கனமழை:
தமிழகத்தில் இன்று முதல் அடுத்த 3 நாட்களுக்கு கனமழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இது குறித்து வெளியான செய்தி குறிப்பில், வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்யக்கூடும். அந்த வகையில் இன்று (18ம் தேதி ) கோவை, திருப்பூர், திண்டுக்கல்,தேனி, தென்காசி, கன்னியாகுமரி, நீலகிரி, திருநெல்வேலி, மதுரை, ஈரோடு, விருதுநகர், சேலம், தருமபுரி, திருப்பத்தூர்,கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
WhatsApp பயனர்களுக்கு இனி ஜாலி தான்.,, வந்தாச்சு புதுசா 5 அப்டேட்!
இதையடுத்து நாளை (அக்.,19) மற்றும் நாளை மறுநாள் (அக்.,20) கடலூர், தஞ்சை, விழுப்புரம், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, புதுக்கோட்டை, நாமக்கல், தர்மபுரி, சேலம்,, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், கள்ளக்குறிச்சி, வேலூர், ராணிப்பேட்டை, சிவகங்கை, திருவண்ணாமலை, பெரம்பலூர், அரியலூர்,திருச்சி, ராமநாதபுரம் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் கனமழை பெய்யும். மேலும் சென்னையை பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படுவதுடன், ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என தெரிவிக்கப்பட்டு உள்ளது.