தமிழகத்தில், மாணவர்கள் பள்ளி இடைநிற்றலை தவிர்ப்பதற்காக திருவள்ளூர் ஆட்சியர் தலைமையில் தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஊராட்சி மன்ற தலைவர்கள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
முக்கிய கூட்டம்:
தமிழகத்தில் கடந்த 2 ஆண்டு கொரோனா தொற்றுக்கு பின், கடந்த ஆண்டு பள்ளிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடைபெற்று வருகிறது. இந்தப் பெருந்தொற்றுக்குப் பின் பல காரணங்களுக்காக, மாணவர்கள் கல்வியை தொடர முடியாத நிலை ஏற்பட்டது.
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
தற்போது, பள்ளிக்கு செல்லாத குழந்தைகளை கண்டறிந்து, அவர்களை மீண்டும் பள்ளிக்கு அழைத்து வருவதற்கான முயற்சியாக திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் டாக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் ஒன்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் பங்கேற்ற அவர், மாணவர்களை இடைநிற்றலை தவிர்ப்பதற்காக அரசு பல்வேறு சிறப்பு திட்டங்களை செயல்படுத்தி வருவதாக தெரிவித்தார்.
மாணவர்களின் பள்ளி இடைநிற்றலை தவிர்ப்பதற்காக, ஊராட்சி மன்ற தலைவர்கள் தங்கள் பகுதிக்கு உட்பட்ட பள்ளிகளுக்கு சென்று அடிக்கடி ஆய்வு நடத்த வேண்டும் எனவும், மாணவர்கள் இடைநிற்றல் இருந்தால் சம்பந்தப்பட்டவர்களை அழைத்து உடனடியாக பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார். பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஊராட்சி மன்ற தலைவர்கள் இதில் முழு ஒத்துழைப்பு தர வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்தார்.